மலிங்க ஏன் LPL தொடரில் இருந்து விலகினார்!

லங்கா பிரீமியல் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை இருபதுக்கு – 20 அணித்தலைவர் லசித் மாலிங்க விலகியதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி இலங்கை அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வழி வகுக்கும் நோக்கத்துடன் தான், லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியதை பலர் விமர்சித்துள்ளனர்.

மேலும் ,அந்நிலையில் விமர்சனங்களுக்கு பதிலளித்த லசித் மாலிங்க, தனக்கான நேரம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெறும் புதிய வீரர்களுக்கு உதவ தயாராகவுள்ளதாகவும் மலிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *