இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் மேலும் 270 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 191 ஆகஅதிகரித்துள்ளது.
கொரோனாவால் இதுவரையில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்து 653 பேர் குணமடைந்துள்ளனர்.
2ஆம் அலைமூலம் 12 ஆயிரத்து 695பேருக்கு கொரோன தொற்றியுள்ளது