நீர் கட்டணங்களை செலுத்த சலுகை காலம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு நீர் கட்டணங்களை செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணங்களை செலுத்த முடியாத தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நீர் பாவனையாளர்கள் கட்டணத்தை செலுத்த முடிந்த தினத்தில் செலுத்துவதற்காக சலுகை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *