மறு அறிவித்தல் வரை அனைத்து மிருகக்காட்சி சாலைகளுக்கு பூட்டு!
கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இன்று (17) முதல் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் மூடுமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல் மிருக்காட்சி சாலைகளினுள் நுழைவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.