ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா பரவியது எப்படி!
பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது எவ்வாறு என்பதனை இனம் காண்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய வெளிநாட்டவர் ஒருவரால் குறித்த தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.