வைத்தியசாலையில் பரீட்சை எழுதவுள்ள ஐந்து மாணவர்கள்!
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மூன்று மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. எனினும், அவர்கள் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் ஐ.டி.எச். வைத்தியசாலை வளாகத்தில் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது. அத்துடன், கொரோனா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒரு மாணவர்கள் அங்கு சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இதன்படி மொத்தம் ஐவர் நாளை பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.