தேங்காய்களை பதுக்குபவர்களைத் தேடி சுற்றிவளைப்பு!

தேங்காய்களை பதுக்கியும், தேங்காய்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மீறியும் விற்பனை செய்யும் வியாபாரிகளை அடையாளம் காண நாடு தழுவிய சுற்றிவளைப்புகளை நடத்தி வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு தேங்காய்களை விற்ற பல வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் தேங்காயின் சுற்றளவின் அடிப்படையில் தேங்காய்களுக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் அறிவித்தது.
இருப்பினும், இவ்வாறு கட்டுப்பாட்டு விலை அறவிக்கப்பட்டது முதல் சந்தையில் தேங்காய்களின் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *