மின்வெட்டை கைவிட மாதந்தோறும் 100 மில்லியன் டொலர்கள் தேவை!
இலங்கையில் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டை முற்றாகக் கைவிடுவதாயின் மாதந்தோறும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,
100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை
நீர் மின்சாரம் அல்லது அனல் மின்சாரம் எந்த வகையிலாவது இருபத்தி நான்கு மணிநேரமும் மின்சாரத்தை வழங்குவது தற்போதைக்கு முடியாத காரியம். அவ்வாறு வழங்குவதாயின் 31000 மெட்ரிக் தொன் டீசல், 63000 மெட்ரிக் தொன் எஞ்சின் ஒயில் மற்றும் 11000 மெட்ரிக் தொன் நெப்னா என்பன தேவைப்படும்.அவற்றைப் பெறுவதாயின் மாதந்தோறும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.