இலங்கையை தொடர்ந்து பாதுகாப்பதற்கு ஒத்துழைக்குமாறு மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!
கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை பெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றிக்கு – சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற சேவைத் துறைகளின் அர்ப்பணிப்பு நிறைந்த பெரும் செயலாற்றலே காரணமாக அமைந்திருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக – சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில், எமது நாட்டு மக்கள் பொறுப்புடனும், மனவிருப்புடனும் செயற்பட்டிருந்தனர்.
இருந்த போதிலும் – பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதில், காலப்போக்கில், மக்கள் அலட்சியத்துடன் நடந்துகொள்ளத் தொடங்கியமை ஒரு கவலையான விடயமாகும்.
எப்படியிருப்பினும் – இன்றைய நிலவரப்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே, மீண்டும் COVID-19 நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது.
ஆனால் – இந்த அனைத்து நடவடிக்கைகளும் வெற்றி தருவது என்பது, நமது சுகாதார வழிகாட்டுதல்களை அலட்சியப்படுத்தாமல், அவற்றை மக்கள் தொடர்ந்தும் பொறுப்புடன் பின்பற்றுவதிலேயே தங்கி உள்ளது.
எம்மையும், ஏனையவர்களையும், ஒட்டுமொத்த நாட்டினையும் தொடர்ந்தும் பாதுகாப்பாக வைத்திருக்க ஒத்துழைக்குமாறு குடிமக்கள் அனைவரையும் நான் அழைத்து நிற்கின்றேன்!