காணமல்போன பத்திரிகையாளர் மரணம்

தி ஐலண்ட்’ பத்திரிகையாளர் ஸக்கி ஜபார் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. அவர் சில நாட்கள் காணாமல்போயிருந்த நிலையிலேயே அவரது சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் தனிமையில் வசித்தவந்த பத்திரிகையாளர் ஜபார் , சில நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை என சகபணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உறவினர் ஒருவர் வீட்டுக்குள் சென்றவேளை மேற்படி பத்திரிகையாளர் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *