நாய் குறுக்கே பாய்ந்ததால் பறிபோனது குழந்தையின் உயிர்!

குருணாகல் மாவட்டத்தின் கல்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 05 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாய் ஒன்று வீதியின் குறுக்கே பாய்ந்தமையால், கட்டுபொத நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த தனியார் பேருந்து ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த குழந்தையொன்று படுகாயம் அடைந்த நிலையில் கட்டுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 4 பேர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுபொத பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *