பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா!

9ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போதே புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார்.

சபாநாயகர் பதவியை ஏற்கவிருப்பதாலேயே அமைச்சுபதவிகள் எதனையும் மஹிந்த யாப்பா ஏற்கவில்லை என ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *