பாராளுமன்றம் வருகிறார் பிள்ளையான்!
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசன்துரை சந்திரகாந்தன், எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
சிறைதண்டனை அனுபவித்தாலும், பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினருக்கு சபை அமர்வில் பங்கேற்பதற்கான சிறப்புரிமை இருக்கின்றது.