கொரோனாவால் உயிரிழந்த இந்து மதத்தைச் சேர்ந்தவரின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம் அமைப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை17) இறந்த கொரோனா நோயாளி ஒருவர் உடலை முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தை சேர்ந்தவர்கள் அடக்கம் செய்தனர்.

இந்த செய்தி பரவலாக கவனம் பெற்றது. இதற்கு இறந்தவர் இந்து என்பது மட்டுமே காரணமல்ல.

தஞ்சாவூர் மாவட்டம் பண்ணவயல் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி(62) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவார காலமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துவந்தார். கடந்த வெள்ளியன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் (தமுமுக) இலவச அவசர ஊர்தி சேவை மூலமாக அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *