இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா!
பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (09) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 56 கைதிகளுக்கும், மாரவிலவை சேர்ந்த குறித்த புனர்வாழ்வு மைய ஆலோசகரான பெண் ஒருவருக்குமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.