இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 134 மில்லியன் ரூபா முடக்கம்!

இலங்கையில் கடந்த வரும் ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற குண்டு தாக்குதலில், 279 பேர் உயிர்ழந்தார்கள். சர்வதேசத்தோடு தொடர்புடைய உள்ளூர் முஸ்லிம் தீவிரவாதிகளே இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருந்தார்கள். இன் நிலையில் இலங்கையில் இதுவரை 100க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில். 2 அமைப்புகளிடம் இருந்து, இவர்களுக்கு பணம் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இலங்கை பொலிசார் இன்ரர்(Interpol) போல் பொலிசாரை நாடியுள்ள நிலையில். இலங்கை வங்கிகளில் சுமார் 134 மிலியன் ரூபா முடக்கப்பட்டுள்ளதாகவும். 8 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும். மேலும் 130 ஏக்கர் காணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரகசியப் பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள்.

இவை அனைத்துமே வெளிநாட்டு முதலீடு ஊடாக வாங்கப்பட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் பெரும் களம் ஒன்றை அமைத்து செயல்பட பல திட்டங்களை தீட்டி இருந்த நிலையில். கிழக்கில் உள்ள பல முஸ்லீம்கள் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *