கொரோனாவால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு கடன் வழங்குதல் தீர்மானம்!
கொவிட்-19 நோய்த்தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு புத்துயிரளிக்கும் அவசிய தேவையினையும் அதனூடாக நாட்டில் பொருளாதார நடவடிக்கையினை ஊக்குவிப்பதையும் இனங்கண்டு மத்திய வங்கியும் இலங்கை அரசாங்கமும் 2020 மார்ச் 24ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டவாறு செளபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி என்ற பெயரில் செளபாக்கியா (சுபீட்சம்) கடன் திட்டத்தின் கீழ் புதிய மீள்நிதியிடல் கடன் வசதியொன்றினைத் தொடங்கியுள்ளன.
மத்திய வங்கியானது இத்திட்டத்தின் கட்டம் i இன் கீழ் 13,861 கடன் விண்ணப்பங்களுக்கென ரூ. 27.9 பில்லியன் தொகைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கிகள், 2020 யூன் 24 வரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 7,274 வியாபாரங்களுக்கு, ரூ. 14.8 பில்லியனை ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன. இக்கடன்கள் 6 மாத சலுகைக் காலத்துடனும் 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலத்துடனும் கூடிய வருடந்தம் 4 சதவீத சலுகை வட்டி வீதத்தினைக் கொண்டவையாகும்.
மேலும், திட்டத்தின் கட்டம் ii இன் கீழ், பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு வருடாந்தம் 4 சதவீத சலுகை வீதத்தில் மீள்கடன் வழங்குவதற்கு வர்த்தக வங்கிகளுக்கு வருடாந்தம் 1 சதவீத ஒசலுகை வீதத்தில் மேலும் ரூ. 120 பில்லியனை வழங்குவதற்கு தற்போது மத்திய வங்கி ஆயத்தமாகவுள்ள