முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் மங்கள அவசர சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
ஹொரகொல்ல பிரதேசத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இல்லத்தில் இச்சந்திப்பு நேற்று நடந்தது.
குறித்த இருவரும் நீண்ட நேரம் தற்கால அரசியல் நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
எனினும் இருவருக்கும் இடையே பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.