கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்தை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது
தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
அவிஃபாவிர் ((Avifavir)) என்ற இந்த மருந்து நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் என ரஷ்ய அரசு நேற்று தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவிகித முதலீடு உள்ள கெம்ரர் ((ChemRar)) என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை உற்பத்தி செய்துள்ளது.
நாட்டில் வைரஸ் தொற்று அதிகரிப்பதால், மிகவும் குறைந்த சமயத்தில், கிளினிகல் சோதனைகள் நடந்து வரும் நிலையிலேயே இந்த மருந்துக்கு ரஷ்ய சுகாதார அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.
மாதந்தோறும் 60000 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது