எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிலை மற்றும் மணி இல்லாமல் கட்சிகள் களத்தில்!
பொதுத்தேர்தலில் தென்னிலங்கையிலுள்ள பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இரு கட்சிகள் தமது சொந்த சின்னத்தை கைவிட்டு, கூட்டணி அமைத்தே பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது 2005 இற்கு பிறகு வெற்றிலை சின்னத்தின்கீழ்தான் பொதுத்தேர்தல்களை சந்தித்துவந்தது.
இம்முறை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து மொட்டு சின்னத்தின்கீழ் அக்கட்சி போட்டியிடுகின்றது.
அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியானது மணி சின்னத்தை கைவிட்டுவிட்டு, தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தில் களமிறங்கியுள்ளது.