தேர்தலில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சித் தலைவர்களின் விருப்பு எண்கள் வெளியானது
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் விருப்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இம்முறை குருநாகல் மாவட்டத்தில் 17ஆம் இலக்கத்தில் போட்டியிட உள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்டத்தில் 15ம் இலக்கத்தில் போட்டியிடுகின்றார்.
அதேபோல முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 20ம் இலக்கத்தில் கொழும்பில் போட்டியிடுகிறார்