நடிகை குஷ்புவின் நெருங்கிய உறவினர் கொரோனாவுக்குப் பலி
பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் நெருங்கிய உறவினர் கொரோனாவுக்கு பலியானதாக டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா ஆபத்தை அதிகம் கண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
அம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு 62,000- ஐத் தாண்டியுள்ள நிலையில், உயிரிழப்பு 2,098 – க அட்திகரித்துள்ளது.
இந்நிலையில், தென்னிந்தியா நடிகையும், அரசியல் ஆர்வலருமான குஷ்புவின் நெருங்கிய உறவினர் மும்பை பெருநகரில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டரில், “எனது நெருங்கிய உறவினர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, திரைத்துறையினரும், ரசிகர்களும் குஷ்புவிற்கு ஆறுதல் தெரிவத்து வருகின்றனர்.