இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா வைரஸ் நோயாளிகள்
இலங்கையில் மேலும் 69 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையில் 96 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில், கொரோனா தடுப்பு மையங்களில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்று வருபவர்களில் 712 பேர் குணமடைந்துள்ளனர்.
456 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 10 பேர் உயிரிழந்துள்ளனர்