பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 45 சடலங்கள் மீட்பு
பாகிஸ்தானில் லாகூரில் இருந்து சென்ற பயணிகள் விமானம் கராச்சியில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில், சென்ற 107 பயணிகளில் 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் கொரோனாவை பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு காரணமாக, விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருந்தது. சில நாட்களுக்கு முன் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. உள்நாட்டு விமான போக்குவரத்தும் சில கட்டுப்பாடுடன் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று லாகூரில் இருந்து 99 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் என 107 பேருடன் பிகே 303 என்ற விமானம் கராச்சி புறப்பட்டு சென்றது. பிற்பகல் 2.30 மணியளவில் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது.