கொரோனா அச்சம் காரணமாக சம்மாந்துறை ஹிஜ்றா பொதுச் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சம்மாந்துறை ஹிஜ்றா பொதுச் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இவ்சந்தையை மீள திறப்பது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையிலானா சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கள ஆய்வினை மேற்கொண்டனர்.
இதில் உதவி தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கபீர், பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், தொழில் நுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் கள ஆய்வில் கலந்து கொண்டனர்.