ஐரோப்பாவில் தொடர் உச்சத்தில் பிரிட்டன் – மொத்த மரணங்கள் 30 ஆயிரத்தை கடந்தன

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் +649 பேர் மரணித்துள்ளதாக, உலக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான, தகவல் வெளியீட்டு இணையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், பிரிட்டனின் மொத்த மரணங்கள் 30,076 ஆக உயர்ந்துள்ளன.

குறிப்பாக ஐரோப்பாவில் கடந்த 24 மணித்தியால இறப்புகளில் பிரிட்டன் தொடர்ந்தும் உச்சத்தை தக்கவைத்துள்ளது. ஸ்பெயின் +244 இறப்புகளையும், இத்தாலி +369 இறப்புகளையும், பெல்ஜியம் 323 இறப்புகளையும் பதிவு செய்துள்ளன. அத்துடன் இத்தாலியின் மொத்த இறப்புகளை விட அதிக எண்ணிக்கையை பிரிட்டன் எட்டியுள்ளது. பிரான்ஸின் நாளாந்த இறப்பு எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், பிரிட்டனில் புதிதாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்ட +6,111 பேருடன், தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 201,101 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை 5pm 04 May 2020 – 5pm 05 May 2020 காலப் பகுதியில் இங்கிலாந்தின் வைத்தியசாலைகளில் மரணமான 54 பேரில், 40 -59 வயதக்கு இடைப்பட்டவர்கள் 4 பேரும், 60 -79 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 19 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 31 பேரும் அடங்குவர் என NHS குறிப்பிட்டுள்ளது.

Total 54
Age group
0-19
20-39
40-59 4
60-79 19
80+ 31
TBC 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *