ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

ஐரோப்பிய நாடுகளில் தான் கடந்த வாரம் கொரோனா பரவல் அதிகம் இருந்துள்ளதாக, உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலுலும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வீரியம் கொண்ட வகையில் தீவிரமாக பரவியது.

இதனால் கோடிக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதன் பாதிப்பு குறைந்து வருகிறது/ இந்நிலையில், உலகசுகாதார அமைப்பு, கடந்த வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் தான் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாக அறிவித்துள்ளது.

இது குறித்து உலகசுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரத்தில் உலக அளவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,000-க்கும் அதிகமான இறப்பு பதிவாகியுள்ளது.

குறிப்பாக கடந்த வாரம் உலக அளவில் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும்தான் கொரோனா தொற்று அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிலும், பிரித்தானியா, துருக்கி, ரஷ்யா, ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று விகிகதம் அதிகம் பதிவாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் 15 சதவீத அளவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *