இலங்கை கடற்படையினர் முப்பது பேருக்கு கொரோனா வைரஸ்
வெலிசரை கடற்படை முகாமில் உள்ள இலங்கை கடற்படையின் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய கடற்படை சிப்பாய்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை தொடர்ந்து 29 சிப்பாய்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினத்தில் மாத்ததிரம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 369ஆக அதிகரித்துள்ளது.
இதுவே இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகளவான தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.