கொரோனா வைரஸ் தொற்றால் எதிர்காலத்தில் இலங்கையின் நிலை மோசமடையலாம்!
கொரோனா வைரஸை தற்போது சமூகத்தில் பரவவிடாமல் தடுத்துவிட்டாலும் எதிர்காலத்தில் அது இலங்கைக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையினை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர, கொழும்பின் தற்போதைய நிலை மோசமாகலாம் என கூறினார்.
மேலும் இதுவரை கொழும்பில் இனங்காணப்பட்ட நோயாளரிடம் இருந்து கொரோனா பலருக்கும் பரவியிருக்கலாம் என்றும் அவர் இதன்போது அச்சம் வெளியிட்டிருந்தார் .