கொரோனா மருத்துவ அறிக்கை வருவதற்கு முன்னரே அச்சத்தில் முதியவர் தற்கொலை
தனக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை வருவதற்கு முன்னரே கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபர், கேரள மாநிலத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார்.
இதனிடையே, இவருக்குக் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்த காரணத்தினால் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 6ஆம் தேதி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
இவர் கேரளாவிலிருந்து வந்த காரணத்தினாலும், கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் கொரோனா வைரஸ் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.