உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து 3 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை! – வெளிவந்தது ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று (ஏப்ரல் 21) ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமா அத் (NTJ), ஜமா அத்தே மில்லதே இப்ராஹீம் ((JMI) மற்றும் விலாயத் அஸ் செய்லானி ஆகிய இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடபட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் இந்த அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.