சிங்கப்பூரில் ஒரு மாதத்திற்கு ஊரடங்குச் சட்டம்

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுகிறது என அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங் அறிவித்துள்ளார்.

அதனால் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெருமளவிலான பணியிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். 1,049 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதிய சமூக இடைவெளி விதிகளை மீறுவோர்கள் மீது 6 மாத சிறை தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராத தொகையும் விதிக்கப்படும். அதனால் பொதுமக்கள் அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *