இலங்கை உட்பட 07 நாடுகளுக்கான விமான பயணங்கள் ரத்து
இலங்கை உள்ளிட்ட 07 நாடுகளின் அனைத்து விமான பயணங்களையும் ரத்துசெய்ய குவைத் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். புதிய கொரோனா வைரஸின் அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீர்மானம் இன்று (07) முதல் ஒருவார காலத்திற்கு நீட்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கைக்கு மேலதிகமாக எகிப்து, லெபனான், சிரியா,பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற நாடுகளுடன் விமான சேவைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.