1000 இலங்கையர்களை தேடும் சவுதி அரேபியா
சவூதி அரேபியாவில் உள்ள பஸ் சாரதி வெற்றிடத்திற்கு இலங்கையர்களை அமர்த்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 45 வயதுக்கு கீழ்ப்பட்ட , 02 வருட அனுபவம் உள்ள சுமார் 1000 பேருக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான முதற்கட்ட ஆவணத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் மேஜர் சுதத் அபேசிங்க, சவூதி அரேபியா பொதுவாகன போக்குவரத்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
தெரிவு செய்யப்படும் 1000 பேருக்கு 3 வாரங்கள் பயிற்சி மற்றும் மொழிக்கற்றல் பயிற்சி என்பன அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.