கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தால் 65 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அறிகுறி
சீனாவில் கொரோனா வியாதி கண்டறியப்படுவதற்கும் 3 மாதங்களுக்கு முன்னரே குறித்த விவகாரத்தை கண்டறிந்து மருத்துவர் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபரில் வெளியான இந்த ஆய்வு முடிவுகளானது, அடுத்த 18 மாதங்களில் உலகெங்கும் மொத்தம் 65 மில்லியன் மக்கள் இந்த கொரோனா வியாதி காரணமாக மரணமடைவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவின் முக்கிய நகரங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா வியாதிக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ள நிலையில் சுமார் 900 பேர் பாதிப்புக்கு உள்ளனதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை பல மடங்கு என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் கொரோனா வியாதி பரவத் தொடங்கியதாக வெளியான தகவல் தம்மை ஒன்றும் பாதிக்கவில்லை என கூறும் முக்கிய மருத்துவ நிபுணரான Dr Eric Toner,
உலக நாடுகளை மொத்தமாக புரட்டிப்போடும் ஒரு கொடிய தொற்றுநோய் பரவும் சாத்தியம் இருப்பதாகவும், அது கொரோனா வைரஸாகவே இருக்க வாய்ப்பு எனவும் மிக நீண்ட காலமாக தாம் எதிர்பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்