சீனாவில் மிருகங்கள் விற்பனை செய்ய தடை
✍நேரடியாக மிருகங்கள் விற்பனை செய்யப்படுவதை முழுமையாக தடைசெய்ய சீனா தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெளவ்வால் மற்றும் ச்சைனீஸ் கோப்ரா எனப்படும் பாம்பு வகைகளிலிருந்தே கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரடியாக நாடுமுழுவதும் மிருகங்கள் விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.