இன்று ஊரடங்கு எங்கும் இல்லை!
நாட்டில் தற்போது நிலவும் அமைதி நிலைமையைக் கருத்தில்கொண்டு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்றிரவு எந்தப் பிரதேசத்திலும் அமுல்படுத்தப்படமாட்டாது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
அதேவேளை, வன்முறைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.