இலங்கையில் ரமழான் மாதப் பிறை இன்று தென்படவில்லை! – நாளைமறுதினமே நோன்பு ஆரம்பம்

இன்று ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு ரமழான் மாதத்திற்க்கான பிறை பார்க்க வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையில் எந்தப் பகுதியிலும் பிறை தென்படவில்லை.

அதனால் ஷஃபான் மாதத்தை நபி மொழி அடிப்படையில் 30 ஆக பூர்த்தி செய்து நாளைய தினம் 06.05.2019 திங்கள் மஹ்ரிப் முதல் ரமழான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்ற அடிப்படையில் நாளைமறுநாள் செவ்வாய்க்கிழமை கடமையான நோன்பை நோற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *