கொழும்பில் கறுப்புப் பூனைப் படையை களமிறக்கத் தயார் நிலையில் டில்லி! – வேண்டாம் என்கிறார் மஹிந்த

இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா தனது விசேட படையான என்.எஸ்.ஜி. எனப்படும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து, பல்வேறு நாடுகளும் விசாரணைகளுக்கு உதவி வருகின்றன.

இந்தநிலையில், இலங்கைக்கு உதவி தேவைப்பட்டால், விசேட படையான தேசிய காவல்படையை அனுப்புவதற்கு தயார் நிலையில் இந்தியா இருப்பதாக இந்திய அரச அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். சி.என்.என். நியூஸ் 18 தொலைக்காட்சியே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா தேசிய காவல்படை கொமாண்டோக்களை அனுப்ப வேண்டிய தேவை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சி.என்.என். நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *