இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!
நாட்டில் இன்று மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் சிகிச்சை பெற்றுவந்த 10 கைதிகளுக்கும், கென்யாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்குமே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்து 819 பேர் குணமடைந்துள்ளனர்.