ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்!

ஐபிஎல் தொடரின் 12 ஆவது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2ஆவது இடம் பெற்றது.

இதனால் நடப்பு சாம்பியன் அணிக்கு சொந்தமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இறுதிப் போட்டி நடத்தப்படுவதாக இருந்தது.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மூன்று கேலரிகள் அனுமதி விவகாரத்தால் பயன்படாமல் இருக்கிறது.

இதனால் இறுதிப் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிளே-ஆப்ஸ’ போட்டிகள் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *