புத்தாண்டு விபத்துகளினால் 413 பேர் வைத்தியசாலையில்!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு பிறப்புடன் இடம்பெற்ற திடீர் விபத்துக்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நூற்றுக்கு 8 வீதத்தால் இவ்வாண்டு விபத்துக்கள் அதிகரித்துள்ளன என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் ஏற்பட்ட விபத்துக்களினால் 413 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதில் 113 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக சேர்க்கப்பட்டுள்ளனர். அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6 வீதத்தால் குறைவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களினால் 49 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 22 வீதத்தால் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடம் தீ விபத்து காரணமாக 6 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அது கடந்த ஒருவர் மட்டுமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *