பள்ளி மாணவி கூட்டு வல்லுறவு; 3 இளைஞர் சிறையில் அடைப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஏமாற்றி கூட்டிச் சென்று மூன்று இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். பள்ளி முடிந்ததும் அவர் ரியூஷன் செல்லுவார்.

அப்போது அந்தச் சிறுமியின் வீட்டி அருகில் குடியிருக்கும் நரேஷ் நட்பாக பழகி வந்துள்ளார்.

ரியூஷனுக்கு மாணவி சென்றபோது அவரை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு நரேஷ் அழைத்துச் சென்றுள்ளார்.

அதன்பின்னர் ராஜா, சூர்யா என அவரது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்னர்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் அளிக்க மூவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.

ஆள் கடத்தல், கூட்டு வல்லுறவு, கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் மூவர் மீது வழக்குப் பதிவு செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அ டைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *