இறுதி ஓவரில் வெற்றிக் கனியை ருசித்தது பஞ்சாப்!

மொஹாலியில் நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் கடைசி ஓவர் வரை பதற்றம் நீடித்தது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணி இருந்தது.

அப்போது பஞ்சாப் அணியில் சாம் கரேனும், கே.எல் ராகுலும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் சாம் ஐந்து ரன்கள் எடுக்க, அடுத்து முழு கவனமும் ராகுலின் பேட்டிங் மீது சென்றது.

நான்காவது பந்தை சந்தித்த ராகுல் அதை பவுண்டரி ஆக்கினார். மேலும், இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்,

ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து பரபரப்பான ஆட்டத்தை பஞ்சாப் அணியின் வெற்றியாக மாற்றினார்.

ஐதராபாத் அணி நிர்ணயித்த 151 ரன்கள் என்ற இலக்கை 20 ஓவர்களில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் பஞ்சாப் அணி எட்டியது.

பஞ்சாப் அணியின் ஆட்டக்காரர்களான கே.எல். ராகுலின் 71 ரன்களும், மயங்க் அகர்வாலின் 55 ரன்களும் அந்த அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *