பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை!
அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளின் முதலாவது தவணை, நாளை (05) வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
![](https://i2.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2019/04/download-4.jpg?resize=225%2C225&ssl=1)
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் பாடசாலைத் தவணை, ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவடைகிறது.
முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள், ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )