டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார் நதீமால் பெரேரா – மாகந்துர மதூஷ் நாளை நீதிமன்றில் ஆஜர்
போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா , சிறைச்சாலை அதிகாரி லலித் குமார ஆகியோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (27ஆம் திகதி) அதிகாலை டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நாடு திரும்பினர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நதீமால் பெரேரா , லலித் குமார ஆகியோரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதேவேளை, டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதூஷ், பாடகர் அமல் பெரேரா உள்ளிட்டோர் நாளை (28ஆம் திகதி) அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.