முதன் முறையாக பெண் பணியாளர்களுடன் சென்ற ‘ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்’ விமானம்!
இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையாக பெண் பணியாளர்களைக் கொண்ட விமானம் ஒன்று சிங்கப்பூருக்குச் சென்றுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL306 என்ற விமானமே சிங்கப்பூரில் நேற்று தரையிறங்கியுள்ளது
இந்த விமானம் இலங்கையிலிருந்து நேற்று அதிகாலை 01.00 மணிக்கு சிங்கப்பூர் நோக்கிச் சென்றது.
குறித்த விமானத்தில் பிரதான விமானி, துணை விமானி உட்பட அனைத்துப் பணியாளர்களும் பெண்களாக இருந்துள்ளனர்.