சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நாவின் உப குழுவினர் இலங்கைக்கு நேரடி விஜயம்!

சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நாவின் உபகுழு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தக் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

எனினும், குழுவின் பயண நாட்கள் தொடர்பான விபரங்கள், மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடந்த சித்திரவதையைத் தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழுவின் இரகசியக் கூட்டத்திலேயே இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான பயணம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டன், காபோன், செனகல், கானா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்த இந்தக் குழு தற்போது மேலதிகமாக இலங்கை, ஆஜென்ரீனா, பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *