1976 இற்கு பிறகு தயாராகிறது தூக்குமேடை! அலுகோசு பதவிக்கு வெளிநாட்டுப் பிரஜை?
அலுகோசு பதவிக்கு வெளிநாட்டுப் பிரஜையொருவரை நியமிக்கலாமா என்பது குறித்து நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு ஆராய்ந்துவருகின்றது.
மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் அதற்கான காலக்கெடு முடிவடைகின்றது.
எனினும், இதுவரையில் கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
எனவேதான், வௌிநாட்டவரை அலுகோசு பதவிக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் இறுதியாக 1976 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம், கத்தோலிக்க திருச்சபை, மனித உரிமை அமைப்பு ஆகியன இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.