கொழும்பின் பல பகுதிகளுக்கும் நாளை ( 09) மட்டுப்படுத்தப்பட்ட நீர்விநியோகமே இடம்பெறவுள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாகவே,  நாளை இரவு 9 மணி முதல் மறுநாள் (10)  பிற்பகல் 3.00 மணி வரை இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் இடம்பெறும் என்று

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 01, 13, 14 மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே மேற்படி நடைமுறை அமுலில் இருக்கும்.